Breaking News

இளம்புவனம் கிராமத்தில் எம்ஜிஆரின் 107 வது பிறந்தநாள் விழா!

  • Share on

தமிழக முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் அவர்களின் 107 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு,தமிழக முழுவதும் அதிமுகவினர் மற்றும் அரசியல் கட்சியினர், சமூக ஆர்வலர்கள் என ஏராளமானோர் கொண்டாடி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரம் அருகே உள்ள இளம்புவனம் கிராம பேருந்து நிலையம் முன்பு உள்ள அதிமுக கொடியேற்றிய பின்பு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த எம்ஜிஆர் அவர்களின் திருவுருவப்படத்திற்கு எட்டையாபுரம் அதிமுக நகரச் செயலாளர் ராஜகுமார் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார். இதற்கு முன்னதாக எட்டையாபுரம் பேரூராட்சி அலுவலகம் அருகே உள்ள எம்ஜிஆரின் திருவுருவ சிலைக்கு அதிமுக நகரச் செயலாளர் ராஜகுமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் இந்நிகழ்வில் எட்டையாபுரம் அதிமுக அவைத்தலைவர் கணபதி, அதிமுக வார்டு செயலாளர் கருப்பசாமி சிவா பிரபு செல்வி சாந்தி உள்ளிட்ட ஏராளமான அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

உங்கள் கருத்தை பதிவிடுக

Comments Added Successfully!

  • Share on

எம்ஜிஆரின் திருவுருவ சிலைக்கு அதிமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை!

"ஸ்ரீ ராமஜென்ம பூமி" அழைப்பிதழ் வழங்கிய பாஜக நிர்வாகி சங்கரலிங்கம்.

  • Share on