தமிழகம் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் அவர்களின் 107 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு,தமிழகம் முழுவதும் உள்ள அதிமுக மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர், எம்ஜிஆர் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு திருவுருவ சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பேருந்து நிலையம் முன்பு உள்ள அதிமுக கொடியேற்றிய பின்பு எம்ஜிஆரின் தெரு உருவ சிலைக்கு விளாத்திகுளம் தொகுதி அதிமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது, இதனைத் தொடர்ந்து மார்க்கெட் அருகே உள்ள எம்ஜிஆரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு, பின்பு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் விளாத்திகுளம் ஒன்றிய குழு பெருந்தலைவர் முனியசக்தி ராமச்சந்திரன், விளாத்திகுளம் முன்னாள் எம்எல்ஏ NKP பெருமாள், ஒன்றிய செயலாளர் பால்ராஜ், அதிமுக விளாத்திகுளம் நகர செயலாளர் மாரிமுத்து,ஜேபேரவை செயலாளர் என். கே. வரதராஜபெருமாள் , கழக இலக்கிய பேச்சாளர் இளங்கோ,பிரியா, சாந்தி உள்ளிட்ட அதிமுகவினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



உங்கள் கருத்தை பதிவிடுக