தூத்துக்குடியில் உள்ள பழமை வாய்ந்த வைகுண்ட பெருமாள் கோவில் அறங்காவல குழு தலைவராக ஏசி செந்தில்குமார் தேர்வு; மற்றும் சங்கர ராமேஸ்வரர் பாகம் பிரியாள் கோவில் அறங்காவலர் குழு தலைவராக கந்தசாமி தேர்வு! தூத்துக்குடியில் உள்ள பழமை வாய்ந்த வைகுண்ட பெருமாள் என கோவிலுக்கு புதிய அறங்காவலர் குழு உறுப்பினர்களாக ஏசி செந்தில்குமார், எல்.ஆர். மந்திரமூர்த்தி, எஸ். பாலசங்கர், கே.ஜெயபால், முருகேஸ்வரி மாரிமுத்து, ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து இன்று தூத்துக்குடி சிவன் கோவிலில் வைத்து அறங்காவல குழு தலைவர் தேர்தல் நடைபெற்றது.இதில் முன்னாள் மாமன்ற உறுப்பினர் ஏசி செந்தில்குமார் அருள்மிகு வைகுண்ட பெருமாள் கோவில் அறங்காவல குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இதுபோல் தூத்துக்குடி சங்கர ராமேஸ்வரர் பாகம் பிரியாள் கோவிலுக்கு அறங்காவலர் குழு உறுப்பினராக கோர்ட் ராஜா, பி எஸ் கே ஆறுமுகம், கந்தசாமி, சாந்தி, ஜெயலட்சுமி, ஆகியோரை நியமனம் செய்யப்பட்டார். இதில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கந்தசாமி அருள்மிகு சங்கர ராமேஸ்வரர் பாகம் பிரியாள் கோவில் அறங்காவலர் குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இதை தொடர்ந்து புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அறங்காவல குழு தலைவர்களுக்கு கோவில் நிர்வாக அதிகாரி தமிழ்ச்செல்வி உள்ளிட்ட அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.இது தொடர்ந்து 39 திமுக வட்டச் செயலாளர் சைவத்திரு கீதா செல்வ மாரியப்பன், சிவன் கோவில் தலைமை பட்டர் செல்வம், சண்முகம்,மற்றும் சிவன் கோவில் அறங்காவல குழு உறுப்பினர்கள் கோர்ட் ராஜா, பி எஸ் கே ஆறுமுகம், சாந்தி, ஜெயலட்சுமி, பெருமாள் கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் எல்.ஆர். மந்திரமூர்த்தி, எஸ். பாலசங்கர், கே.ஜெயபால், முருகேஸ்வரி மாரிமுத்து, ஆகியோர் புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அறங்காவலர் குழு தலைவர்கள் ஏசி செந்தில்குமார், கந்தசாமி ஆகியோருக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.



உங்கள் கருத்தை பதிவிடுக