விளாத்திகுளத்தில் அண்ணாமலை We the Leaders அமைப்பின் உறுப்பினர் சேர்க்கை முகாம்: ஆர்வத்துடன் உறுப்பினராக சுமார் 500-க்கும் மேற்பட்டோர் சேர்ப்பு!
தமிழக பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் பாரதிய ஜனதா கட்சியில் இருந்து விலவதாக அறிவித்து, தான் புதிய கட்சி ஆரம்பிப்பதாக தெரிவித்த நிலையில், We The Leders இன்னும் அமைப்பை அறிமுகப்படுத்தினார், அறிமுகப்படுத்திய ஒரே நாளில் மட்டும் இணையதளம் வாயிலாக சுமார் 6 லட்சம் பேர் அண்ணாமலையின் புதிய இயக்கத்தில் இணைந்தனர், அதனைத் தொடர்ந்து தமிழகத்தில் உள்ள பாஜக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சியில் இருந்து அரசியலமைப்பினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் என பலர் அண்ணாமலையின் புதிய இயக்கத்தில் இணைந்து வருகின்றனர்.
இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தனியார் திருமண மண்டபத்தில் அண்ணாமலை We The Leaaders அமைப்பின் முகாம் கடம்பூர் அருண் ராஜா தலைமையில் நடைபெற்ற இந்த உறுப்பினர் சேர்க்கை முகாமில் விளாத்திகுளம் மத்திய பகுதியை சேர்ந்த சுமார் 500-க்கும் மேற்பட்டோர் அண்ணாமலை இயக்கத்தின் உறுப்பினர் வடிவத்தை நிரப்பி தங்களை உறுப்பினராக இணைத்துக் கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து முகாமில் போதைப் பொருள் விழிப்புணர்வு சம்பந்தமாக அனைவராலும் உறுதிமொழி ஏற்கப்பட்டது.
நடைபெற்ற நிகழ்வில் சொக்கலிங்கபுரம் காட்டு ராஜா, துரைச்சாமிபுரம் வெங்கடேஷ், வழக்கறிஞர் பொன்ராஜ், கோவில்பட்டி சீனிவாசன், விளாத்திகுளம் கார்த்தி, விளாத்திகுளம் மற்றும் கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதி WeThe Leaders அமைப்பின் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் என பலர் திரளாக கலந்து கொண்டனர்.



உங்கள் கருத்தை பதிவிடுக