விளாத்திகுளம் அருகே காட்டுப்பகுதியில் ஆண் சடலம்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே மேலகல்லூரணி - காடல்குடி செல்லும் சாலை காட்டுப்பகுதியில் ஆண் சடலம் ஒன்று கிடப்பதாக சங்கரலிங்கபுரம் காவல் நிலையத்திற்கு அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
இதனை அடுத்து உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டதில் அவர் நாகலாபுரம் பள்ளிவாசல்பட்டி பகுதியை சேர்ந்த பரமசிவம் என்பவரின் மகன் மாரிச்செல்வம் (45) என்பதும், இவர் குடும்பத்தைப் பிரிந்து மன வேதனையில் தினமும் மது அருந்தி வந்ததாகவும் கூறப்படுகிறது.
மேலும் இது குறித்து சங்கரலிங்கபுரம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



உங்கள் கருத்தை பதிவிடுக