கலைஞர் மகளிர் உரிமைத்துறை வழங்குவது தொடர்பாக விமர்சனம் செய்த அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இப்போது முகத்தை எங்கு கொண்டு வைப்பார்கள் என அமைச்சர் கீதா ஜீவன் கேள்வி.தூத்துக்குடி தாலுகா அலுவலகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை விடுபட்ட நபர்கள் பதிவு செய்யும் முகாமை அமைச்சர் கீதா ஜீவன் நேரில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது,
கலைஞர் மகளிர் உரிமைத்துறை பெறுவது தொடர்பான குறைகளை சரிசெய்ய ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் வட்டாச்சியர் அலுவலகங்களில் முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்ற அவர் கலைஞர் மகளிர் உரிமைத்துறை பதிவு செய்வதில் சர்வர் பிரச்சனை இருப்பதால் தாமதம் ஏற்பட்டு வருகிறது விரைவில் சரிசெய்யப்படும் என்றார் மேலும்,மகளிர் உரிமைத்துறை பதிவு வரும் 30-ம் தேதி வரை பதிவு செய்துகொள்ளலாம்.
மகளிர் உரிமைத்துறை பதிவு செய்வதற்காக இசேவை மையத்தில் இலவசமாக கட்டணமில்லாமல் பதிவு செய்து கொள்ளலாம்.மகளிர் உரிமைத்துறை வழங்குவது தொடர்பாக அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்தார்கள் ஆனால் இப்போது எங்குகொண்டு முகத்தை வைப்பார்கள் என்று தெரியவில்லை. எனஅமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்தார்.



உங்கள் கருத்தை பதிவிடுக