பாரத பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள மேலக்கரந்தை கிராமத்தில் பாரதிய ஜனதா கட்சியின் தூத்துக்குடி மாவட்ட மருத்துவர் அணி சார்பில் மாபெரும் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. இம்முகாமை பாரதிய ஜனதா கட்சியின் தூத்துக்குடி வடக்கு மாவட்டத் தலைவர் வெங்கடேசன் சென்னகேசவன் ,மாவட்ட பொருளாளர் K.K.R.கணேசன் , ஆகியோர் முன்னிலையில் மாவட்ட மருத்துவர் அணி தலைவர் டாக்டர், மதனகோபால் தலைமையில் மாபெரும் இலவச மருத்துவ முகாமினை தொடங்கி வைத்தார்கள்.
இதில் கோவில்பட்டி துளசி மருத்துவமனை சேர்ந்த மருத்துவர்கள் டாக்டர் ராஜேந்திர பிரசாத், டாக்டர் சுஜாதா, டாக்டர் விக்னேஷ் ,மற்றும் ஒன்றிய செயலாளர்கள் சிவபெருமாள், ஒன்றிய பொதுச்செயலாளர் வெங்கடேசன் , முன்னாள் ராணுவ பிரிவு மாவட்டத் துணைத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி ,முன்னாள் ராணுவ பிரிவு ஒன்றிய தலைவர் செந்தில்குமார், மற்றும் மருத்துவப் பணியாளர்கள் உட்பட மேலக்கரந்தை மற்றும் அதன் சுற்றுவட்டார கிராம பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதன் தொடர்ச்சியாக இலவசமாக மருத்துவ ஆலோசனைகள் மற்றும் சிகிச்சை வழங்கப்பட்டன ,மேலும் இம்முகாமில் கிராம மக்களுக்கு இலவசமாக இரத்த அழுத்தம் பரிசோதனை, இரத்த சர்க்கரை பரிசோதனை, மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டன.



உங்கள் கருத்தை பதிவிடுக