மன்னார் வளைகுடா
மற்றும் அதனை சுற்றியுள்ள குமரிகடல் பகுதியில் காற்றின் சுழற்சியின் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம்,கடலூர்,நாகை,மயிலாடுதுறை,நாகப்பட்டினம்,சிவகங்கை, ,தஞ்சாவூர்,திருவாரூர்,தூத்துக்குடி,ராமநாதபுரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் இடி,மின்னல் சூறைக்காற்றுடன் கனமழை பெய்யும் என என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அதேபோல் மே 12 முதல் 20 ஆம் தேதி வரை தமிழகம் முழுவதும் மழைக்கு வாய்ப்பு உள்ளது
என தனியார் வானிலை மையமும் தெரிவித்துள்ளது. அதேபோல் மதுரை, விருதுநகர்,திருச்சி, வேலூர் அதனை சுற்றியுள்ள மாவட்டங்கள் அதேபோல் மேற்கு
தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள கோயம்புத்தூர்,நீலகிரி,திருப்பூர், தேனி ஆகிய மாவட்ட பகுதிகளில் அடுத்த 3 நாட்களுக்கு மழை பெய்யும் எனக் கூறப்படுகிறது.




உங்கள் கருத்தை பதிவிடுக