சாத்தூர் பள்ளி +2 பொதுத்தேர்வில் 594 மதிப்பெண் எடுத்து சாதனை புரிந்த மாணவிக்கு கிரீடம் அணிவித்து பாராட்டு!
விருதுநகர் வருவாய் மாவட்ட அளவில் +2 பொதுத்தேர்வில் முதலிடம் பெற்ற மதுரை சி. இ. ஓ. ஏ. சாத்தூர் பள்ளி மாணவியில் பயின்ற +2 மாணவி நேகா 594/600 மதிப்பெண்களும் 3 பாடங்களில் முழு மதிப்பெண் பெற்றும் அசத்தியுள்ளார்.(Centum in 3 subjects) இதனால் மாணவியின் சாதனையை பாராட்டும் வகையில் இன்று (07-05-2024) மாணவி நேகாவிற்கு பொன் துகில், வெற்றிப்பட்டயம் வழங்கி மாணவிக்கு கிரீடம் அணிவித்து சி. இ. ஓ. ஏ. கல்வி நிறுவனங்களின் நிறுவனத் தலைவர் முனைவர் திரு. இராசா கிளைமாக்சு, தலைவர் திரு. சாமி, திரு. சிவப்பிரகாசம், துணைத் தலைவர்கள் திரு. பாக்கியநாதன், திரு. அசோகராஜ், திரு. சவுந்தரபாண்டி, முதன்மை முதல்வர் செல்வி. கலா முதல்வர் திருமதி. மஞ்சுளா மற்றும் பள்ளி ஆசிரியர்கள், பணியாளர்கள் என அனைவரும் பாராட்டுக்களை தெரிவித்தனர்..




உங்கள் கருத்தை பதிவிடுக