எட்டையாபுரம், புதூர்,நாகலாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் ரொவீனா ரூத் ஜேன்வாக்கு சேகரித்தார்.
பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் பல்வேறு அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சார மேற்கொண்டு வாக்கு சேகரித்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் ரொவீனா ரூத் ஜேன் எட்டையாபுரம், நாகலாபுரம், புதூர், சோழபுரம், வேடநத்தம் உள்ளிட்ட பகுதிகளில் மைக் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
இதில் தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் பாண்டி, மாவட்ட மகளிர் அணி அன்னலட்சுமி, விளாத்திகுளம் தொகுதி செயலாளர் ரமேஷ்குமார்,பாலாஜி ராமச்சந்திரன்,நகரச் செயலாளர் யூசப், வடக்கு மாவட்ட பொருளாளர் செய்யது, உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



உங்கள் கருத்தை பதிவிடுக