தமிழகத்தில் போதை பொருட்கள் புழக்கத்தை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் பேரூராட்சி,நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளில் அதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது, இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பேருந்து நிலையம் முன்பு தமிழகத்தில் போதைப் புழக்கத்தை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசை கண்டித்து விளாத்திகுளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன் மற்றும் விளாத்திகுளம் ஒன்றிய குழு பெருந்தலைவர் முனிசக்தி ராமச்சந்திரன் தலைமையில் ஏராளமான அதிமுகவினர் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டு திமுக அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பினர்.இந்நிகழ்வில் முன்னாள் எம்எல்ஏஎன்.கே.பெருமாள், விளாத்திகுளம் அதிமுக ஒன்றிய செயலாளர்கள் மகேஷ்,பால்ராஜ்,தகவல் தொழில்நுட்ப பிரிவு சுரேஷ், மகளிர் அணி சாந்தி, பிரியா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



உங்கள் கருத்தை பதிவிடுக