Breaking News

நாடாளுமன்றத் தேர்தல் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது.

  • Share on

தமிழகம் முழுவதும் திமுகவினர் வீடு வீடாக மற்றும் தெருமுனை பிரச்சாரம் செய்து, 2021 முதல் தற்போது வரை திமுக அரசின் செய்த சாதனைகள் குறித்த தெருமுனை பிரச்சாரங்கள் செய்து வருகின்றனர்.இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி விளாத்திகுளம்  கிழக்கு ஒன்றிய திமுக மகளிரணி மற்றும் மகளிர் தொண்டரணி சார்பில்,மெட்டில்பட்டி கிராமத்தில் 2நாடாளுமன்றத் தேர்தல் தெருமுனை பிரச்சாரக்கூட்டம் நடைபெற்றது. புதூர் மேற்கு ஒன்றிய செயலாளர் மும்மூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்த தெருமுனை பிரச்சாரக்கூட்டத்தில், கலந்து கொண்டு பேசிய   விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், பொதுமக்களிடம் திராவிட முன்னேற்றக் கழகம் கொண்டு வந்த புதிய நலத்திட்டங்கள், முதல்வரின் சாதனைகள், திமுக ஆட்சியில் தமிழகத்தின் முன்னேற்றம் குறித்து சிறப்புரையாற்றினார்.இந்நிகழ்வில் திமுக ஒன்றிய செயலாளர்கள் செல்வராஜ்,ராதாகிருஷ்ணன், புதூர் ஊர் கழகச் செயலாளர்  மருது பாண்டி மற்றும் கட்சி தொண்டர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

உங்கள் கருத்தை பதிவிடுக

Comments Added Successfully!

  • Share on

தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் MLA மார்க்கண்டேயன் சிறப்புரை!

முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு எட்டயபுரத்தில், 100 பெண்களுக்கு தையல் மெஷின் வழங்கிய அமைச்சர் கீதா ஜீவன்!

  • Share on

Trending News