Breaking News

தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் MLA மார்க்கண்டேயன் சிறப்புரை!

  • Share on

வருகின்ற நாடாளுமன்றத் தேர்தல் குறித்து  தமிழகத்தில் திமுக ஆட்சியில் செய்த சாதனைகள் குறித்து தமிழக முழுவதும்  தெருமுனைப் பிரச்சாரம் மேற்கொள்ள  தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார், இதனை அடுத்த திமுகவினர், தமிழக முழுவதும் வீடு வீடாக மற்றும் தெருமுனை பிரச்சாரம் செய்து, 2021 முதல் தற்போது வரை திமுக அரசின் செய்த சாதனைகள் குறித்த தெருமுனை பிரச்சாரக் கூட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி விளாத்திகுளம்  கிழக்கு ஒன்றிய திமுக மகளிரணி மற்றும் மகளிர் தொண்டரணி சார்பில், சின்னவநாயக்கன்பட்டி கிராமத்தில்  நாடாளுமன்றத் தேர்தல் தெருமுனை பிரச்சாரக்கூட்டம் நடைபெற்றது. புதூர் மத்திய ஒன்றியம் ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த தெருமுனை பிரச்சாரக்கூட்டத்தில், கலந்து கொண்டு பேசிய   விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், பொதுமக்களிடம் திராவிட முன்னேற்றக் கழகம் கொண்டு வந்த புதிய நலத்திட்டங்கள், முதல்வரின் சாதனைகள், திமுக ஆட்சியில் தமிழகத்தின் முன்னேற்றம் குறித்து சிறப்புரையாற்றினார்.இந்நிகழ்வில் திமுக ஒன்றிய செயலாளர் செல்வராஜ், திமுக கட்சி தொண்டர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

உங்கள் கருத்தை பதிவிடுக

Comments Added Successfully!

  • Share on

இல்லம்தோறும் ஸ்டாலினின் குரல் திண்ணைப் பிரச்சாரத்தை எம்எல்ஏ மார்க்கண்டேயன் தொடங்கி வைத்தார்.

நாடாளுமன்றத் தேர்தல் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது.

  • Share on

Trending News