15 வயது சிறுமியை திருமண ஆசை கூறி பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூபாய் 17,500/- அபராதம் விதித்து போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு.
கடந்த 2021ஆம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 15 வயது சிறுமியை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் சம்பந்தப்பட்ட மதுரை காமராஜபுரம் பகுதியைச்சேர்ந்த ராமசாமி மகன் கார்த்திகேயன் (32/26) என்பவரை கழுகுமலை காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இவ்வழக்கின் விசாரணை தூத்துக்குடி போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் போக்சோ நீதிமன்ற நீதிபதி திருமதி. பிரீத்தா இன்று (17.06.2026) மேற்படி எதிரி கார்த்திகேயனை குற்றவாளி என உறுதி செய்து அவருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூபாய் 17,500/- அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.



உங்கள் கருத்தை பதிவிடுக