பாராளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில நாட்களை உள்ள நிலையில் பல்வேறு அரசியல் கட்சியினர் தமிழக முழுவதும் வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் சிவசாமி வேலுமணியை ஆதரித்து, விளாத்திகுளம் பேரூராட்சிக்குட்பட்ட 3, 4,7 வது வார்டு பகுதிகளில்அதிமுகவினர் வீடு வீடாக சென்று அதிமுக தேர்தல் வாக்குறுதி அடங்கிய துண்டு பிரசுரங்கள் வழங்கி இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர். இந்நிகழ்வில் விளாத்திகுளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் NK பெருமாள், ஜெயலலிதா பேரவை வரதராஜபெருமாள், விளாத்திகுளம் நகர செயலாளர் மாரிமுத்து,ஒன்றிய செயலாளர் பால்ராஜ், கிளைச்செயலாளர் வேல்முருகன்,மற்றும் அதிமுக மகளிர் அணி சாந்தி மற்றும் பிரியா அதிமுக கூட்டணி கட்சியினர் என பலர் கலந்து கொண்டனர்.



உங்கள் கருத்தை பதிவிடுக