எட்டையாபுரத்தில் நடிகை விந்தியா இரட்டை இலை சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பு!
தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சிவசாமி வேலுமணியை ஆதரித்து, நடிகையும் அதிமுக மாநில கழக பேச்சாளருமான நடிகை விந்தியா, தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள எட்டையாபுரம் பட்டத்து விநாயகர் கோவில் முன்பு திறந்தவெளி வாகனத்தில் நின்றவாறு இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
வாக்கு சேகரிக்க வந்த நடிகை விந்தியாவிற்கு எட்டையாபுரம் அதிமுக நகரச் செயலாளர் ராஜகுமார் தலைமையில் சிறப்பாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது, இந்நிகழ்வில் அதிமுக தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சரும், தற்போதைய கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜு, விளாத்திகுளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன், அதிமுக ஒன்றிய செயலாளர்கள் அன்புராஜ்,தனவதி,காந்தி என்ற காமாட்சி, மகேஷ், பால்ராஜ் உள்ளிட்ட அதிமுக தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



உங்கள் கருத்தை பதிவிடுக