எட்டயபுரம், கீழ ஈரால் உள்ளிட்ட பகுதிகளில் கனிமொழி தேர்தல் பரப்புரை செய்யும் இடங்களை எம்எல்ஏ மார்க்கண்டயேன் ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட எட்டையாபுரம், கீழ ஈரால், கடலையூர், கருப்பூர்,தாப்பாத்தி உள்ளிட்ட பகுதிகளில், திமுக துணைப் பொதுச் செயலாளரும், திமுக மாநில மகளிர் அணி தலைவியுமான கனிமொழி ,தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியின் திமுக வேட்பாளராக போட்டியிடும் கனிமொழி வருகின்ற ஏப்ரல் 3ம் தேதி உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்க தேர்தல் பரப்புரை மேற்கொள்ள உள்ளார்.தேர்தல் பரப்புரை மேற்கொள்ள இடங்களை, விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டயேன் நேரில் சென்று ஆய்வு செய்தார். இந்நிகழ்வில் இந்தியா கூட்டணி கட்சியினர் மற்றும் ஏராளமான திமுக நிர்வாகிகள் தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.



உங்கள் கருத்தை பதிவிடுக