தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கோவில்பட்டி கிழக்கு ஒன்றியத்துக்குட்பட்ட பாரதிய ஜனதா கட்சி, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், மற்றும் சமத்துவ மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த 150 க்கு மேற்பட்ட உறுப்பினர்கள் முன்னாள் அமைச்சரும் தற்போதைய கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜு முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். இந்த நிகழ்விற்கு வந்த அதிமுக தூத்துக்குடி பாராளுமன்ற வேட்பாளர் சிவசாமி வேலுமணிக்கு அதிமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர், இந்நிகழ்வில் எட்டையாபுரம் அதிமுக நகர செயலாளர் ராஜகுமார், விளாத்திகுளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சின்னப்பன் மற்றும் என்.கே பெருமாள், அதிமுக ஒன்றிய செயலாளர் அன்புராஜ்,தனபதி, பால்ராஜ், கோவில்பட்டி முன்னாள் சேர்மன் சத்யா ராமச்சந்திரன், பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், எட்டயபுரம் அதிமுகவைத் தலைவர் கணபதி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



உங்கள் கருத்தை பதிவிடுக