வருகின்ற ஏப்ரல் 19ம் தேதி என்று தமிழக மற்றும்
புதுச்சேரியில் பாராளுமன்றத் தேர்தல்
நடைபெற உள்ள நிலையில், அனைத்துக்
கட்சியினரும் தீவிர பிரச்சாரம் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தூத்துக்குடி
மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட புதூர் தனியார் திருமண மண்டபத்தில், தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் மீண்டும்
போட்டியிடும்,தூத்துக்குடி
பாராளுமன்ற உறுப்பினரும்,திமுக துணை
பொதுச்செயலாளரும், திமுக மாநில
மகளிர்அணி தலைவி கனிமொழியை ஆதரித்து விளாத்திகுளம் தொகுதியில் தீவிரப் பிரச்சாரம்
மேற்கொள்ளுவது குறித்து விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் தலைமையில் திமுக கழக
நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது,
இதில் பேசிய விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர்
மார்க்கண்டேயன் திமுக பாராளுமன்ற
வேட்பாளர் கனிமொழியை 5 லட்சம் வாக்குகள்
வித்தியாசத்தில் வெற்றிபெற வைக்க வேண்டும் என்று கட்சி நிர்வாகிகளுக்கு
அறிவுறுத்தினார். இந்நிகழ்வில் திமுக ஒன்றிய செயலாளர்கள் செல்வராஜ், ராதாகிருஷ்ணன்,மும்மூர்த்தி, அன்புராஜன், பேரூர் கழக திமுக செயலாளர் மருது பாண்டியன்,
திமுக இளைஞரணி துணை
அமைப்பாளர் மகேந்திரன், தொழிலதிபர்
வாசுதேவன், வெற்றிவேலன்
உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் ஏராளமானோர்
கலந்து கொண்டனர்...



உங்கள் கருத்தை பதிவிடுக