Breaking News

இலங்கையில் இருந்து தனுஷ்கோடிக்கு கடல் வழியாக 30 கிலோமீட்டர் நீந்தி சாதனை படைத்த சிறுவர்,சிறுமிகள்!

  • Share on

இலங்கையில் இருந்து தனுஷ்கோடிக்கு கடல் வழியாக நீந்தி சாதனை படைத்த சிறுவர்,சிறுமிகள் உட்பட 12 பேருக்கு உற்சாக வரவேற்பு! மகாராஷ்டிரா மாநிலம் தானே பகுதியில் செயல்பட்டு வரும் ராம்சேது திறந்த நீர் நீச்சல் அறக்கட்டளை சேர்ந்த சிறுவர்,சிறுமிகள் உட்பட 12 நீச்சல் வீராங்கனைகள் இலங்கை மற்றும் இந்தியா இரு நாடுகளின் அனுமதி பெற்று, இலங்கை தலைமன்னாரிலிருந்து ராமேஸ்வரம் தனுஷ்கோடி வரை உள்ள சுமார் 30 கிலோமீட்டர் தொலைவிலான பாக்ஜலசந்தி கடல் பரப்பினை சிறுவர்,சிறுமிகள் உட்பட 12 நீச்சல் வீராங்கனைகள் கடந்த 04-05-2024  சனிக்கிழமை காலை 6-30 மணிக்கு இலங்கை தலைமுன்னாரிலிருந்து தொடங்கி அன்று மாலை 4:40 மணி அளவில் (10:00 மணி நேரம் 10 நிமிடங்களில்) தொடர் ஓட்ட முறையில் (RELAY RACE) நீந்தி தனுஷ்கோடி அரிச்சல் முனையை வந்தடைந்தனர். கடலில் நீந்தி வந்து சாதனை படைத்த வீராங்கனைகளுக்கு சுங்கத்துறை, மறைன் போலீசார், சுற்றுலா பயணிகள், மீனவர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர்  இந்திய எல்லையான அரிச்சல் முனையில் மாலை அணிவித்து  சிறப்பாக வரவேற்பு அளித்தனர். இந்த நீச்சல் தொடர் ஓட்டம் முறைக்கு இலங்கை தூதரகம் மற்றும் இந்திய தூதரகம், பாதுகாப்புத் துறை அமைச்சகம் ஆகியோர் முழு ஒத்துழைப்பு தந்தது வரவேற்பு கூறியதாகும்.

உங்கள் கருத்தை பதிவிடுக

Comments Added Successfully!

  • Share on

மனித உணவு சங்கிலியில் பாதி உணவுகளை தரும் மீனவர்களுக்கு: உலக மீனவர் தின வாழ்த்துக்கள்!

  • Share on