ஜனநாயக கடமையை நிறைவேற்றிய முன்னாள் அமைச்சர்!
நடைபெற்று வரும் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு அரசியல் பிரபலங்கள், சினிமா பிரபலங்கள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள், ஆகியோர் தங்களின் ஜனநாயக கடமையை நிறைவேற்றுவதற்காக தங்களின் வாக்குச்சாவடிகளில், வரிசையில் இன்று ஆர்வமுடன் தங்களின் ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி அதிமுக வடக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சரும் தற்போதைய கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜு தனது சொந்த கிராமமான கடம்பூர் சிதம்பராபுரம் இந்து தொடக்கப் பள்ளியில் தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றினார்.



உங்கள் கருத்தை பதிவிடுக