Breaking News

தமிழகத்தில் திமுக செய்த சாதனைகள்? தெருமுனை பிரச்சாரக்கூட்டம் நடைபெற்றது!

  • Share on

வருகின்ற நாடாளுமன்றத் தேர்தல் குறித்து தமிழகத்தில் திமுக ஆட்சியில் செய்த சாதனைகள் குறித்து தமிழக முழுவதும் தெருமுனைப் பிரச்சாரம் மேற்கொள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார், இதனை அடுத்து திமுகவினர், தமிழக முழுவதும் வீடு வீடாக மற்றும் தெருமுனை பிரச்சாரம் செய்து, 2021 முதல் தற்போது வரை திமுக அரசின் செய்த சாதனைகள் குறித்த தெருமுனை பிரச்சாரக் கூட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள புதூர் பேருந்து நிலையம் முன்பு, திமுக மகளிரணி மற்றும் மகளிர் தொண்டரணி சார்பில், நாடாளுமன்றத் தேர்தல் தெருமுனை பிரச்சாரக்கூட்டம் நடைபெற்றது. புதூர் பேரூர் கழகச் செயலாளர்  மருதுபாண்டி தலைமையில் நடைபெற்ற இந்த தெருமுனை பிரச்சாரக்கூட்டத்தில், தலைமைக் கழக பேச்சாளர் சரவெடி சரத்பாலா கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்களிடம் திராவிட முன்னேற்றக் கழகம் கொண்டு வந்த புதிய நலத்திட்டங்கள், முதல்வரின் சாதனைகள், திமுக ஆட்சியில் தமிழகத்தில் திமுக செய்த சாதனைகள் பற்றி சிறப்புரையாற்றினார். இந்நிகழ்வில்,திமுக ஒன்றிய செயலார்கள் இராதாகிருஷ்ணன், மும்மூர்த்தி,செல்வராஜ், தொழிலதிபர் வாசுதேவன்எட்டையாபுரம் பேரூராட்சி  தலைவர் ராமலட்சுமி சங்கரநாராயணன்   மற்றும் கட்சி தொண்டர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

உங்கள் கருத்தை பதிவிடுக

Comments Added Successfully!

  • Share on

ஆட்டுச்சந்தையில் அடிப்படை வசதிகளை செய்து தர அதிமுகவினர் கோரிக்கை!

நாடாளுமன்றத் தேர்தல் தெருமுனை பிரச்சாரக்கூட்டம் நடைபெற்றது.

  • Share on