தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சத்யா நகரை சேர்ந்த லோடுமேன் சண்முகம்
என்பவரது வீடு தற்போது பெய்த கனமழை காரணமாக பெரிதும் சேதம் அடைந்துள்ளது.
இதையறிந்த அதிமுக (ஓபிஎஸ் அணியின்) ஓ.பன்னீர்செல்வத்தின் ஆணைக்கிணங்கதூத்துக்குடி மாவட்ட செயலாளர் வினோபாஜி
அறிவித்தலின்படி, கழக எம்ஜிஆர் இணைச்
செயலாளர் கருப்பூர் ராஜகோபால் என்ற சீனி ஏற்பாட்டில் விளாத்திகுளம் மேற்கு
ஒன்றியச் செயலாளர் சின்னத்திரை மற்றும் கிழக்கு ஒன்றிய செயலாளர் சோனியப்பன்
தலைமையிலும் விளாத்திகுளம் நகர செயலாளர் சண்முகவேல் முன்னிலையில் வீடு
பாதிப்படைந்த லோடுமேன் சண்முகத்திற்கு அரிசி, சமையல் பொருட்கள் உள்ளிட்ட நிவாரண பொருட்கள் மற்றும் நிதி உதவி வழங்கப்பட்டது.
இதனைப் பெற்றுக் கொண்ட லோடுமேன் சண்முகம் மற்றும் அவரது குடும்பத்தினர் கழக
நிர்வாகிகளுக்கு தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார்



உங்கள் கருத்தை பதிவிடுக