விளாத்திகுளம் அருகே குளத்தூரில் அதிமுக பூத்கமிட்டி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள குளத்தூரில் விளாத்திகுளம் மேற்கு ஒன்றியம் சார்பில் அதிமுக பூத்கமிட்டி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.இந்தக்கூட்டத்திற்கு சிறப்பு விருந்தினராக காஞ்சி பன்னீர்செல்வம் கலந்துகொண்டு கட்சியின் வளர்ச்சிகள் குறித்து ஆலோசனைகளை வழங்கினார்,அதனை தொடர்ந்து, உறுப்பினர் சேர்க்கை விண்ணப்பபடிவம் வழங்கப்பட்டது, இந்நிகழ்வில் விளாத்திகுளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் என்,கே.பெருமாள், விளாத்திகுளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்,சின்னப்பன், விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் மகேஷ், விளாத்திகுளம் ஒன்றிய குழுவின் தலைவர் முனியசக்தி ராமச்சந்திரன், வரதராஜ பெருமாள், குளத்தூர் ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் மாரிச்செல்வி பாலமுருகன், குளத்தூர் கிளைச் செயலாளர் வேல்மயில், மற்றும் கட்சி நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



உங்கள் கருத்தை பதிவிடுக