விளாத்திகுளம் பகுதியில் வருகின்ற 28-ம் தேதி கனிமொழி எம்.பி.-யின் மக்கள் களம் நிகழ்ச்சி! இது தொடர்பாக அமைச்சர் கீதாஜீவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், திராவிட முன்னேற்றக் கழக துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி, தமிழக சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க செயலாளருமான கீதாஜீவன் ஆகியோர் வருகிற அக்டோபர் 28-ம் தேதி சனிக்கிழமையன்று விளாத்திகுளம் பகுதியில் மக்கள் களம் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்கள். இதன்படி, மாலை 4 மணிக்கு சிவஞானபுரம் கிராமத்திலும், மாலை 5 மணிக்கு சக்கம்மாள்புரம் ஊராட்சி பொம்மையாபுரம் கிராமத்திலும், மாலை 6 மணிக்கு நமச்சிவாயபுரம் கிராமத்திலும், இரவு 7 மணிக்கு அருங்குளம் கிராமத்திலும், 8 மணிக்கு வெள்ளையம்மாள்புரம் ஆகிய பகுதிகளில் மக்களை சந்தித்து குறைகளை கேட்கிறார்கள். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது...



உங்கள் கருத்தை பதிவிடுக