விளாத்திகுளம் அருகே எட்டயபுரத்தில் தேசிய கொடி காத்த மாவீரன் திருப்பூர் குமரனின் 120வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மாபெரும் இலவச மருத்துவ முகாம். தேசிய கொடி காத்த மாவீரன் திருப்பூர் குமரனின் 120வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே எட்டயபுரத்தில் உள்ள சமுதாய கூடத்தில் வைத்து தமிழ் செம்படை கழகம் மற்றும் தென்னகத்து செங்குந்தர் பேரமைப்பு சார்பில் திருப்பூரின் குமரன் 120 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மாபெரும் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.
முகாமை முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு திருப்பூர் குமரனின் திரு உருவ படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தி இலவச மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் தமிழ் செம்படை கழக நிர்வாகிகள், அதிமுகவினர் கலந்து கொண்டனர்



உங்கள் கருத்தை பதிவிடுக