விளாத்திகுளம் அருகே எட்டயபுரத்தில் பாஜக கட்சி கொடி கம்பம் அமைக்க முயற்சி - பாஜக நிர்வாகிகள் 19 பேர் கைது - கொடிக்கம்பம் பறிமுதல் ! தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள எட்டயபுரத்தில் பாஜக ஒன்றிய தலைவர் சரவணகுமார் தலைமையில் பாஜகவினர் நான்கு இடங்களில் கட்சி கொடி கம்பம் அமைத்து கொடியேற்ற முயற்சி செய்தனர்.
இது குறித்து தகவல் கிடைத்ததும் விளாத்திகுளம் டிஎஸ்பி ஜெயச்சந்திரன் தலைமையில் போலீசார் கட்சி கொடி கம்பம் அமைக்க முயற்சி செய்த பாஜக நிர்வாகிகளை தடுத்து நிறுத்தி, பாஜக நிர்வாகிகள் 19 பேரை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர்.மேலும் கொடி கம்பத்தையும் பறிமுதல் செய்தனர்



உங்கள் கருத்தை பதிவிடுக