விளாத்திகுளத்தில் புதுமண தம்பதிகளுக்கான ஒருநாள் கருத்தரங்கம் நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வட்டாரத்தில் தமிழ்நாடு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் கீழ், ஒருங்கிணைந்த குழந்தைகள் திட்டத்தின் சார்பில் திட்ட அலுவலர் தாஜ் நிஷா பேகம் தலைமையில் புதுமண தம்பதிகளுக்கான ஒரு நாள் கருத்தரங்கம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நியூட்ரிசன், சரிவிகித உணவு முறை, கர்ப்பம் தரிப்பதற்கு முன்பும் பின்பும் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவு முறைகள் மற்றும் மருத்துவம், குடும்பத்தில் உள்ளவர்களை கையாளும் முறைகள்  உள்ளிட்டவை குறித்து விழிப்புணர்வுகள் வழங்கப்பட்டது. அதுமட்டுமின்றி ஆரோக்கியத்தை அதிகரிக்க கூடிய காய் வகைகள் மற்றும் தானிய வகைகள் கண்காட்சி படுத்தப்பட்டு வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த கருத்தரங்கு நிகழ்ச்சியில் மேற்பார்வையாளர்கள், செவிலியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், புதுமண தம்பதிகள், வட்டார ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.