விளாத்திகுளம் அரசு மருத்துவமனை சித்த மருத்துவ பிரிவு சார்பில்- விளாத்திகுளம் ஒன்றிய தொடக்கப் பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. தமிழகம் முழுவதும் டெங்குவை தடுக்கும் முன்னெச்சரிக்கை விழிப்புணர்வு நிகழ்ச்சி தமிழக  சுகாதாரத்துறை  சார்பில் பள்ளி கல்லூரிகளில் சிறப்பு முகம் நடைபெற்று வருகிறது.இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில்  மாணவ மாணவியர்களுக்கு விளாத்திகுளம் அரசு மருத்துவமனை சித்த பிரிவு மருத்துவர் தமிழமுதன் யோகா மருத்துவர் ஜனார்த்தனன் ஆகியோர்,டெங்கு தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மருத்துவம் மற்றும்யோகா பயிற்சி, இயற்கை உணவுகள் பற்றி எடுத்துரைத்தனர்.முகாமின் நிறைவாக மாணவ மாணவிகளுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பள்ளியின் ஆசிரிய பெருமக்கள் பள்ளி மாணவ மாணவிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.