விளாத்திகுளம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் புரட்டாசி தேய்பிறை பிரதோஷ விழா சிறப்பாக நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் அமைந்துள்ள 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில், புரட்டாசி மாத தேய்பிறை பிரதோஷ விழாவை முன்னிட்டு, நந்திகேஸ்வரருக்கு 11 வகையான வாசனைத் திரவியங்கள்,  பல்வேறு வகையான மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, பஞ்சமுக தீபா தாரணை  மற்றும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது, இதற்கு முன்னதாக அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வர சுவாமிக்கு என்னை காப்பு சாற்றி திருமஞ்சனம், மஞ்சள், அரிசி, மாவு, பால்,தயிர்,இளநீர் பஞ்சாமிர்தம் பல்வேறு வகையான  சிறப்பாக அபிஷேகம் மற்றும் பஞ்சமுக  தீபாதாரணை நடைபெற்றது. இதில்  விளாத்திகுளம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.