தூத்துக்குடி கடலோர பாதுகாப்பு காவல்படையினர் சார்பாக நடைபெற்ற ‘சாகர் கவாச்” பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சியில் தூத்துக்குடி புதிய துறைமுகத்தில் தீவிரவாதிகளால் பணயக் கைதிகளாக பிடிக்கப்பட்டவர்களை மீட்பது போன்று ஒத்திகை.
கடந்த 10.10.2023 மற்றும் 11.10.2023 ஆகிய 2 நாட்கள் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்கும் ஒத்திகை நிகழ்ச்சியான ‘சாகர் கவாச்” இந்திய கடலோர பாதுகாப்பு படையினரால் நடத்தப்பட்டது. இதில் நேற்று (11.10.2023) தமிழ்நாடு காவல்துறை கடலோர பாதுகாப்பு குழுமம் சார்பாக காவல்துறை கூடுதல் இயக்குநர் அவர்களின் உத்தரவின்படி தூத்துக்குடி மாவட்டத்தில் புதிய துறைமுகத்தில் கடல் வழியாக 6 தீவிரவாதிகள் ஊடுருவி புதிய துறைமுகம் முகத்துவாரத்தில் உள்ள அலுவலகத்தை கைப்பற்றி அங்கு பணியில் இருந்த 4 ஊழியர்களை பணய கைதிகளாக பிடித்து இருப்பதை பாதுகாப்பாக மீட்பது சம்மந்தமான ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள், நாகப்பட்டினம் கடலோர பாதுகாப்பு குழும காவல் கண்காணிப்பளார் திரு. அதிவீரபாண்டியன் அவர்கள், தூத்துக்குடி மாவட்ட சார் ஆட்சியர் திரு. கௌரவ் குமார் இ.ஆ.ப மற்றும் கடலோர பாதுகாப்பு குழுமம் தூத்துக்குடி மண்டல காவல் துணை கண்காணிப்பாளர் திரு. பிரதாபன் மற்றும் பாதுகாப்பு துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடியில் தீவிரவாதிகள் ஊடுருவல்?
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் புரட்டாசி தேய்பிறை பிரதோஷ விழா!
அடுத்த
இலட்சிய ஆசிரியர் விருது - 2023
இதையும் படிக்கலாம்
பொது மக்களை மரியாதை இன்றி நடத்தும் எட்டையபுரம் சார்பதிவாளரை கண்டித்து சிபிஎம் கண்டண ஆர்ப்பாட்டம்!
09 Jul 2026
விளாத்திகுளம் அருகே கோவில் கொடை விழாவை முன்னிட்டு நடைபெற்ற மாபெரும் எருது கட்டு விடும் விழா!
09 Jul 2026
விளாத்திகுளம் அருகே வீட்டில் படுத்திருந்த பெண் கழுத்தில் வெட்டு காயங்களுடன் கொலை : 15 பவுன் தங்க நகை மாயம்!
07 Jul 2026
பெண்களை கேலி கிண்டல் செய்து அவமானப்படுத்தி வரும் சிஎஸ்ஐ தூய ஆலய குருவானவர்!
28 Jun 2026