தூத்துக்குடி கடலுக்குச் செல்ல வேண்டாம் என்ற மீன்வளத் துறையின் எச்சரிக்கையை மீறி மீன்பிடி தடைக்காலத்திற்கு பின்பு கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற விசைப்படகு மீனவர்கள் 250க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றன.
தூத்துக்குடியில் 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலத்திற்கு பின்பு நேற்று விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல இருந்த நிலையில் மன்னர் வளைகுடா மற்றும் தென்மேற்கு கடல் பகுதியில் காற்று 45 கிலோ மீட்டர் முதல் 65 கிலோ மீட்டர் வரை வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை எச்சரிக்கையை தொடர்ந்து கடலுக்கு செல்ல விசைப்படகு மீனவர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை வருகிற 18-ஆம் தேதி வரை மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டு அறிவிப்பு பலகை வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் நேற்று இரவு மீன்வளத் துறையின் அறிவிப்புக்கு எதிராக கடலுக்குச் செல்வதற்காக விசைப்படகு மீனவர்கள் ஆயத்தமாகினர் அதை அடுத்து மீன்வளத் துறை இணை இயக்குனர் உள்ளிட்ட அதிகாரிகள் விசைப்படகு மீனவருடன் பேச்சுவார்த்தை நடத்தினர் இதில் உடன்பாடு ஏற்படாத நிலையில் விசைப்படகு மீனவர்கள் வருகிற 18-ஆம் தேதி வரை கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மீன்வளத் துறை சார்பில் உத்தரவு பிறப்பிக்க பட்டத்துடன் மீனவர்களுக்கு வழங்கப்படும் டோக்கன் வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் மீன்வளத் துறையின் எச்சரிக்கையை மீறி தூத்துக்குடியில் இன்று காலை விசைப்படகு மீனவர்கள் 61 நாட்கள் தடைக்காலத்திற்கு பின்பு கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். இன்று மீன் பிடிக்கச் சென்ற விசைப்படகுகளை நூற்றுக்கணக்கான மீனவர்கள் கூடி படகுகள் கடலுக்கு செல்வதை உற்சாகமாக பார்த்தனர் தங்களுக்கு நல்ல மீன் கிடைக்கும் என விசைப்படகு மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.