நாகை அருகே செம்பினாத்தூரில் விசிக முகாம் செயலாளரின் மனைவியை இரும்பு ராடால் மண்டையை உடைத்த திமுக பெண் ஊராட்சி மன்றத் துணை தலைவர்; உறவினர்களோடு வீட்டை அடித்து உடைத்து அடாவடிவிடியா திமுக ஆட்சியில் கூட்டணி கட்சியினரை அடித்துக் கொண்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அடுத்த செருநல்லூர் ஊராட்சி செம்பியனாத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மனைவி ராஜேஷ்வரி.  சிவக்குமார் அப்பகுதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முகாம் செயலாளராக இருந்து வருகிறார்.  சிவக்குமாருக்கும் அதே பகுதியை சேர்ந்த கோவிந்தராஜன் குடும்பத்தினருக்கும் இடத்தகாறில் முன் விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று சிவக்குமார் தனது வீட்டருகே சென்ட்ரிங் மரம், பலகைகளை அடுக்கியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த கோவிந்தராஜன் எங்கள் இடத்தில் மரம், பலகைகளை அடுக்க கூடாது என வாக்கு வாதத்தில் ஈடுப்பட்டு தகராறில் ஈடுப்பட்டுள்ளார்.தகராறு முற்றவே கோவிந்தராஜன், அவரது மகன் முத்தரசன், முத்தரசன் மனைவியும் திமுக ஊராட்சி மன்றத் துணைத் தலைவருமான கவிதா ஆகியோர் சிவக்குமார் மற்றும் அவரது மனைவி ராஜேஷ்வரியை கடுமையாக தாக்கி உள்ளனர். மேலும் கவிதா இரும்பு ராடால் ராஜேஷ்வரியை தலையில் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த ராஜேஷ்வரி, சிவக்குமார் ஆகியோர் கீழ்வேளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனைத் தொடர்ந்து கவிதா தூண்டுதலின் பேரில்  அவரது உறவினர்கள் கார்த்தி, கனேசன், சதிஷ் ஆகியோர் சிவக்குமார் மருத்துவமனையில் இருக்கும் போது அவரின் வீட்டை அடித்து உடைத்து சூறையாடி உள்ளனர். இதில் வீட்டில் இருந்த டிவி, பேன், பீரோ உள்ளிட்ட பொருட்கள் உடைந்து நொறுங்கியது. இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் கூறும் போது தாங்கள் மருத்துவமனையில் அடிப்பட்டு இருக்கும் போது ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் கவிதாவின் உறவினர்கள் தங்கள் மகன் மற்றும் மகள் தனியாக இருக்கும் போது  வீட்டை அடித்து நொறுக்கியும், பாத்திரம், பொருட்களை வாய்க்காலில் தூக்கி எரிந்து  பீரோவில் இருந்த பணம், நகையையும் எடுத்துச் சென்று விட்டதாகவும் கூறினர். இது குறித்து கீழ்வேளூர் போலீசார் இருத்தரப்பு மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.