மன்னார் வளைகுடா கடல் பகுதியில் வீசி வரும் பலத்த காற்று காரணமாக நாட்டு படகுகள் அதிக அளவில் கடலுக்குச் செல்லாததால் மீன்களின் வரத்து குறைவாக காணப்பட்டது மீன்களின் விலை மீண்டும் உயர்வு.மன்னார் வளைகுடா கடல் பகுதியில் பலத்த காற்று வீசி வருவதன் காரணமாக தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன்பிடி துறைமுகத்திலிருந்து ஏராளமான நாட்டுப் படகுகள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.குறைவான நாட்டுப் படகுகளே கடலுக்கு மீன்பிடிக்க சென்றுள்ளன.இன்று சனிக்கிழமை குறைவான படகுகளே  கரை திரும்பின இதனால் திரேஸ் புரம்  நாட்டுப் படகு மீன்பிடி துறைமுக ஏல கூடத்திற்கு குறைவான மீன்களே ஏலத்திற்கு வந்தன,இதன் காரணமாக கடந்த வாரம் குறைய தொடங்கிய மீன்களின் விலை மீண்டும் உயர துவங்கி உள்ளது சீலா கிலோ 1200 ரூபாய் வரையும் விளை மின் கிலோ 400 ரூபாய் வரையும் ஊளி கிலோ 400 ரூபாய் வரையும் பாறை கிலோ 300 ரூபாய் வரையும் நன்டு கிலோ 250 ரூபாய் வரையும் சாலை ஒரு கூடை ரூபாய் 2400 வரையும் கண்ணாடி பாறை கிலோ 500 ரூபாய் வரையும் விற்பனையானது சனிக்கிழமை என்பதால் அசைவ பிரியர்கள் விலையையும் பொறுப்பெடுத்தாமல் மீன்களை வாங்கிச் சென்றனர்.