விளாத்திகுளம் சுற்றுவட்டார பகுதிகளில் 2 மணி நேரத்திற்கு மேலாக பலத்த மழை - விவசாயிகள் மகிழ்ச்சி! தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம்,எட்டயபுரம், வேம்பார், சூரன்குடி, குளத்தூர் சுற்றுவட்டார பகுதியில் கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்து வந்தது. இன்றும் வழக்கம் போல காலை முதல் வானம் மேகமூட்டத்துடன், காணப்பட்டது மட்டுமின்றி சாரல் மழையும் தொடங்கியது. நேரம் செல்ல, செல்ல சாரல் மழை பலத்த மழையாக பெய்ய தொடங்கியது. எட்டயபுரம் , தாப்பாத்தி முத்தலாபுரம் வீரப்பட்டி சிந்தலக்கரை , அயன்ராசா பட்டி, மேலக்கரந்தை, மாசார்பட்டி, பகுதிகளில் சுமார் 2மணி நேரத்திற்க மேலாக பரவலான மழை பெய்ததது.
அதேபோல் கே. துரைச்சாமிபுரம், மாதலாபுரம், காடல்குடி, கந்தசாமிபுரம், பூதலாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது, கடுமையாக அடித்த வெயிலின் காரணமாக பயிரிடப்பட்ட பயிர்கள் கருகி விடுமோ என்ற அச்சத்தில் விவசாயிகள் மன வேதனையில் இருந்த நிலையில் இன்று பெய்த மழையினால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த மழையின் காரணமாக பயிரிடப்பட்ட விவசாயிகள் களை எடுப்பதற்கு ஏற்ற மழை என்று தெரிவித்துள்ளனர்
Vilathikulam
விளாத்திகுளம் சுற்றுவட்டார பகுதிகளில் 2 மணி நேரத்திற்கு மேலாக பலத்த மழை - விவசாயிகள் மகிழ்ச்சி!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
விவசாயிகளுக்கு வழங்கபடும் இழப்பீடு தொகையை தனியார் இன்சூரஸ் நிறுவனங்கள் கொள்ளையடிப்பதற்கு தான் இத்திட்டம் வழி வகிக்கிறது
அடுத்த
செண்பகவல்லியம்மன் திருக்கோவில் ஐப்பசி திருவிழா; கொடியேற்றத்துடன் தொடக்கம்!
இதையும் படிக்கலாம்
காமராஜரின் 124-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசுப்பொருட்களை வழங்கிய DSP-க்கள்!
02 Aug 2026
15 ஆண்டுகளாக குடிநீர் இல்லாமல் தவிக்கும் கிராம மக்கள்: ஆட்சியாளர்கள் மாறினாலும் குடிநீர் பிரச்சனை தீரவில்லை !
02 Aug 2026
50 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடிய இளம் பெண்ணை துரிதமாக செயல்பட்டு உயிருடன் மீட்ட தீயணைப்புத் துறையினர்!
01 Aug 2026
5 கிலோ மீட்டர் சாலையை கடக்க 1/2 மணி நேரமாகும் போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலை!
01 Aug 2026