முத்துக்குமராபுரம் கிராமத்தில்  கூட்டுக் குடிநீர் திட்ட பணியை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் தொடங்கி வைத்தார்!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள முள்ளூர் ஊராட்சிக்கு உட்பட்ட முத்துக்குமராபுரம்,ஐயர்பட்டி ஆகிய பகுதி மக்கள் பயன்பெறும்  வகையில்,முத்துக்குமராபுரம் கிராமத்தில்  ரூபாய் 26 லட்சத்து 36 ஆயிரம் மதிப்பீட்டில் கூட்டுக் குடிநீர் திட்ட பணியை விளாத்திகுளம் சட்டமன்றஉறுப்பினர் மார்க்கண்டேயன் தொடங்கி வைத்தார்.

நிகழ்வில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவபாலன்,ராமராஜ் ஓட்டப்பிடாரம் ஒன்றிய பெருந்தலைவர்  ரமேஷ் ஓட்டப்பிடாரம் ஒன்றிய துணைப் பெருந்தலைவரும்,ஒன்றிய செயலாளருமான காசிவிஸ்வநாதன் விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன் முள்ளூர் ஊராட்சி மன்ற தலைவர் ராமசாமி ஒன்றிய கவுன்சிலர் ராஜ் ஊராட்சி மன்ற தலைவர்கள் கௌரி கருணாகரன், சண்முகையா, சந்தனராஜ் தூத்துக்குடி வடக்கு மாவட்ட ஆதிதிராவிடர் நல அணி துணை அமைப்பாளர் முத்துராஜ் தூத்துக்குடி வடக்கு மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர்கள் கருணாகரன், சென்றாயப்பெருமாள் ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர்  ராதாகிருஷ்ணன் கூட்டுறவு சங்கத்தலைவர் ஆனந்த்,கிளை செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி,முருகானந்தம், சின்னத்தம்பி,லட்சுமணன் உட்பட கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.