தமிழக மின்சாரத்துறையின் மின் மீட்டரை விற்கும் போலி மின்சார வாரிய ஊழியர் - எட்டயபுரத்தில் பெண்ணிடம் மோசடி செய்தது அம்பலம்?

 

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகேயுள்ள எட்டயபுரம் கார்த்திகை வீதியில் சாத்தூரப்பன் என்பவரின் மகன்  தனசேகரனக்கு சொந்தமாக ஒரே இடத்தில இரண்டு வீடுகள் உள்ளது. இந்த வீட்டை தனசேகரன் அழகுராதாகிருஷ்ணன், குணசுந்தரி(45) தம்பதியினருக்கு வாடகைக்கு வீட்டுள்ளார். மற்றொரு வீட்டில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வந்துள்ளது. மேலும் வீட்டில் மின் வயர்கள் பொருத்தும் பணியும் நடைபெற்று வந்துள்ளது. இந்நிலையில் நேற்று மாலையில்  வீட்டில் வாடகைக்கு இருக்கும்  அழகுராதாகிருஷ்ணன் மனைவி குணசுந்தரியிடம் (45) வெள்ளை நிற பேண்ட் சர்ட் அணிந்த குள்ளமான ஒருவர்  எட்டயபுரம் மின்வாரியத்திலிருந்து வருவதாகவும் சாத்துரப்பன்    பெயருக்கு புதிய மின் இணைப்பு பெற விண்ணப்பம செய்துள்ளார் எனவும் அதற்கு புதிய மின்அளவி மீட்டர் வந்துள்ளது. எனக்கூறி தான்கொண்டுவந்த ஒரு மின்அளவி மீட்டரை கொடுத்து விட்டு கட்டணமாக ரூ.5100 தேவை என  கேட்டுள்ளார்.

இதனையடுத்து குணசுந்தரி மதுரையில் வசித்து வரும் வீட்டு உரிமையாளர் தனசேகரன் தாயார் ரத்தினம்மாளுக்கு செல்போனில்  தொடர்பு கொண்டு மீட்டர் மாற்றுவது குறித்து தகவல் தெரிவித்துள்ளார். இது குறித்து ஏதும் விபரம் தெரியாத ரத்தினம்மாள் வீட்டில் குடியிருந்த வரும் குணசுந்தரியிடம் மின்வாரிய ஊழியருக்கு பணம் கொடுக்க கூறியுள்ளார். குணசுந்தரியும்  போலி மின்ஊழியரிடம் 5500 கொடுத்துள்ளார். சில்லரை இல்லை என கூறி சில்லறை மாற்றி வருவதாக கூறி சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் மின்ஊழியர் வராததால் இது குறித்து எட்டயபுரம்  மின்அலுவலகத்திற்கு தொடர்பு கொண்டுள்ளார். அனால் அலுவலகத்தில் இருந்து புதிய மின் மீட்டர் மாற்ற  யாரையும் அனுப்பவில்லை எனத் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து போலி மின் ஊழியரிடம் தான் பணம் கொடுத்து ஏமாற்றப்பட்டது குணசுந்தரிக்கு தெரிந்தது.

 இப்பிரச்சினை குறித்து எட்டயபுரம் மின்வாரிய அலுவலகம் மற்றும் எட்டயபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்,அந்த மர்ம நபர் கொடுத்த மின் மீட்டர் தமிழக மின்சாரத்துறை வழங்க கூடிய மீட்டர். ஆனால் அது நெல்லை மண்டலத்தில் பொருத்தப்படும் மீட்டர் கிடையாது, வேறு மண்டலத்தில் உள்ள மீட்டர் என்று மின்சார வாரிய ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்,வீட்டில் வேலை நடைபெற்று வருவதால் மின்சார வாரிய அலுவலகத்தில் இருந்து வந்து இருக்கலாம் என்று நினைத்து தான் அந்த நபர் கூறியது உண்மை என்று கூறி வீட்டு உரிமையாளர் அம்மாவிற்கு தொடர்பு கொண்டு கேட்டதாகவும், மின்சார வாரியத்தில் இருந்து வந்து இருந்தால் பணத்தினை கொடுத்து விடு சொன்னதால், தான் வேலை பார்த்து வைத்திருந்த 5500 ரூபாயை கொடுத்தாகவும், சில்லரை மாற்றிவிட்டு வருவதாக கூறி சென்றவர் திரும்பவில்லை என்று தெரிந்தும் எட்டயபுரம் மின்வாரிய அலுவலகத்தில் கேட்ட போது வந்தவர் போலி என்று தெரியவந்ததாக கூறுகிறார் குணசுந்தரி,எட்டயபுரம் மின்சார வாரிய அலுவல இளநிலை உதவி மின் பொறியாளர் சங்கர் இது குறித்து நம்மிடம் கூறுகையில் சம்பந்தப்பட்டவர்கள் தங்களுக்கு மின் இணைப்பு கேட்டு விண்ணப்பம் செய்யவில்லை, அவர்களுக்கு மின்மீட்டர் வழங்கியது மின்சார ஊழியர் கிடையாது.இது தமிழக மின்சாரத்துறை வழங்கும் மீட்டர் தான், ஆனால் எங்கள் மண்டல மீட்டர் கிடையாது. தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாகவும், காவல்துறையினர் உதவியுடன் சிசிடிவி காட்சிகளை வைத்து பார்த்ததில் அந்த நபர் இப்பகுதியை சேர்;ந்தவர் போல் தெரியவில்லை, மின்சார துறை சம்பந்தமாக குறு செய்தி வந்தாலும், எதுவாக இருந்தாலும் மின்சார வாரிய அலுவலகத்திற்கு தொடர்ப்பு கொள்ள வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தாலும், மக்கள் இது போன்று ஏமாந்து விடுவதாக தெரிவித்தார்.போலி மின் வாரிய ஊழியர் தமிழக மின்சாரத்துறையின் மின் மீட்டரை விற்பனை செய்து பெண்ணிடம் செய்த நூதன மோசடி பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது