தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரம் காவல் நிலைய போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் முத்தையாபுரம் தோப்பு வடக்கு தெருவில் பன்னீர்செல்வம் என்பவரின் மகன் கருப்பசாமி(54) என்பவருக்கு சொந்தமான மளிகை கடையில் போலீசார் சோதனை செய்தபோது, கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் வைத்திருந்தது தெரிய வந்தது, அதேபோன்று முத்தையாபுரம் அத்திமரப்பட்டி சாலையில் முருகன் என்பவருக்கு சொந்தமான மொழியை கடையில் 4 கிலோ புகையிலை பொருட்கள் விற்பனைக்கு வைத்திருந்தது தெரிய வந்தது. இதனைஅடுத்து முருகன் மற்றும் கருப்பசாமியை கைது செய்த போலீசார், இவர்களது 2 கடைகளுக்கும் சீல் வைத்தனர்.மேலும் ரூபாய்,2220 மதிப்புள்ள 4 கிலோ புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்தனர்.