தூத்துக்குடி மீன்வளத்துறை ஆய்வாளர் பொன்சரவணன்மற்றும் கடலோர சட்ட அமலாக்க பிரிவு ஆய்வாளர் உமயப்பெருபாகம் மற்றும் கடலோர காவல் படையினர் AADESH என்ற இந்திய கடற்படை ரோந்துக்கப்பலில், தூத்துக்குடி மாவட்ட எல்லைப் பகுதியான வேம்பார் கடற்கரையிலிருந்து பெரியதலை வரை தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். தற்போது மீன்பிடி தடைகாலம் அமலில் உள்ளதால், கேரளா மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் ஆழ்கடலில் மீன்பிடிப்பில் ஈடுபட்டு உள்ளனரா என்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.