தூத்துக்குடி அருகே உள்ள தருவைகுளம் பகுதியை சேர்ந்த நாட்டுப்படகு மீனவர்கள் ஆழ்கடலில் மீன் பிடிக்க திரேஸ்புரம் நாட்டுப்படகு மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் தருவைக்குளம் பகுதி நாட்டுப்படகு மீனவர்கள் பாதிப்பு மாவட்ட நிர்வாகம் மீன்வளத்துறை உரிய நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சி தலைவர் அலுவலகத்தில் மனு!தூத்துக்குடி தருவைகுளம் பகுதியை சேர்ந்த நாட்டுப் படகு மீனவர்கள் கடந்த சனிக்கிழமை ஆழ்கடல் பகுதியில் 13நாட்டிக்கல் மைல் தொலைவில் மீன் பிடிப்பதற்காக வலையை கடலில் வீசும் போது அங்கே வந்த திரேஸ்புரம் பகுதியை சேர்ந்த நாட்டுப்படகு மீனவர்கள் இந்தப் பகுதியில் தருவைகுளம் பகுதி மீனவர்கள் மீன்பிடிக்க கூடாது எனக் கூறி அவர்களை விரட்டி உள்ளதாக கூறப்படுகிறது.இதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட தருவைகுளம் பகுதி நாட்டுப்படகு மீனவர் சங்கம் சார்பில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மீன்வளத்துறை இந்த விஷயத்தில் உடனடியாக தலையிட்டு ஆழ்கடலில் மீனவர்களிடையே மோதல் ஏற்படுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர் மாவட்ட நிர்வாகம் மின்வளத் துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க விட்டால் தருவைகுளம் உள்ளிட்ட பல்வேறு பகுதி நாட்டு படகு மீனவர்களை திரட்டி போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தனர்.பேட்டி செந்தில்குமார் தருவைகுளம் நாட்டுப்படகு சங்கம்