தூத்துக்குடியில் தேசிய பசுமை படை சார்பில் காற்று மாசுபடுதலை தவிர்த்தல் குறித்த விழிப்புணர்வு ஓவிய போட்டி! 400க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்பு!20-11-2023 தூத்துக்குடியில் தேசிய பசுமை படை மற்றும் தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை தூத்துக்குடி மாநகராட்சி பள்ளிக் கல்வித்துறை ஆகியவை சார்பில் காற்று மாசுபடுவதை தவிர்த்தல் குறித்த விழிப்புணர்வு ஓவியப்போட்டி நடத்தப்பட்டது.இந்த ஓவிய போட்டியில் 40 பள்ளிகளை சேர்ந்த சுமார் 400க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டு காற்று மாசு படுவதை கட்டுப்படுத்துவது குறித்து விழிப்புணர்வு ஓவியங்களை வரைந்தனர் இதில் சிறப்பாக காற்று மாசுபடுவதை தடுப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஓவியம் வரைந்த மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் ரொக்குப் பரிசு வழங்கப்பட உள்ளது.