ஓட்டப்பிடாரம் அருகே  மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை மதிப்பீட்டுக குழ தலைவர் அன்பழகன் நேரில் ஆய்வு!  தமிழ்நாடு சட்டப்பேரவை மதிப்பீட்டு குழுவினர் அதன் தலைவர் அன்பழகன் தலைமையில் தூத்துக்குடி மாவட்டத்தில்  ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.அதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் அருகே சில்லாங்குளம் கிராமத்தில் அமைந்துள்ள முத்துக்கருப்பன் மேல்நிலைப்பள்ளி மற்றும் ஆதிதிராவிட மாணவர் மாணவி விடுதியில் தமிழ்நாடு சட்டப்பேரவை மதிப்பீட்டுக்  குழு தலைவர் அன்பழகன்  தலைமையில் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் டாக்டர் செந்தில்ராஜ் ஆகியோர் கொண்ட குழுவினர் பள்ளிகளில் ஆய்வு செய்தனர்...பள்ளியில் வழங்கப்படும் சீருடைகள், வகுப்புகள் நடைபெறும் முறைகள், மாணவ மாணவிகளுக்கு செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்து ஆய்வு  செய்தனர். மேலும் அருகில் உள்ள மாணவர் விடுதிக்கு சென்று ஆய்வு செய்தனர். உணவு தயாரிக்கும் இடத்திற்கு சென்று, உணவு தயாரிக்கப்படும் முறைகள் குறித்தும் அதன் தரம் குறித்து ஆய்வு செய்தனர்...