ஓட்டப்பிடாரம்  கோவில் கொடை விழாவை முன்னிட்டு கிரிக்கெட் போட்டி - செல்போனில் நேரத்தை வீணடிக்கமல் - கிரிக்கெட், கபடி விளையாடுங்கள் - அறிவுரை வழங்கிய உதவி ஆய்வாளர்.  தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே குலசேகர நல்லூர் கிராமத்தில் அமைந்துள்ள  ஸ்ரீகாளியம்மன் கோவில் கொடை விழாவை முன்னிட்டு இன்று கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.இந்த போட்டியில் 17 கிரிக்கெட் வீரர்களுக்கு ஓட்டப்பிடாரம் காவல் உதவி ஆய்வாளர் முத்துராஜா அவர்கள் பனியன் நன்கொடை வழங்கி வீரர்களை ஊக்கப்படுத்தினார். இதனை தொடர்ந்து  அவர் கூறுகையில் இளைஞர்கள் செல்போனில் அதிக நேரம் பயன்படுத்தாமல் உடல் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள  கபடி,  கிரிக்கெட்  என  விளையாட்டுகளை விளையாட வேண்டும் என்று அறிவுறுத்தினர்.இந்த நிகழ்ச்சியில் காவல்துறை இளைஞர்கள் மற்றும் அந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர்...