தூத்துக்குடி உலகப் புகழ்பெற்ற பனிமய மாதா பேராலய தங்கத்தேர் திருவிழாவில் ஐந்தாம் நாள் நிகழ்ச்சியாக அன்னை தங்க நற்கருணை பேழை அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்புதூத்துக்குடியில் உள்ள உலக புகழ்பெற்ற பணிமயமாதா 441 ஆம் ஆண்டு திருவிழா மற்றும் தங்கத்தேர் திருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. திருவிழாவின் 5ஆம் நாள் நிகழ்ச்சியாக நற்கருணை பவனி இன்று இரவு நடைபெற்றது.இதையொட்டி ஆலய வளாகத்தில் இருந்து மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் அன்னை தங்க நற்கருணை பேழையை பிடித்தபடி ஊர்வலமாக சென்றனர்.  இந்த நற்கருணை பகுதியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு மாதாவின் அருள் பாடல்களை பாடியபடி சென்றனர் நற்கருணை பவனி ஆலயம் வந்ததை தொடர்ந்து மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் அந்தோணி தலைமையில் பந்தல் ஆசிர்வாத நிகழ்ச்சியும் நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.