நாகலாபுரம் சாமி அய்யா நாடார் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவ - மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டியினை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பள்ளி தலைமையாசிரியை சுப்புலட்சுமி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சசிகுமார், வெங்கடாசலம்,  ஊராட்சி மன்ற தலைவர் உலகம்மாள் முனியசாமி, மாவட்ட பிரதிநிதிகள் முருகேசன்,கார்த்திகைமுருகன் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சதீஷ்குமார், புதூர் மேற்கு ஒன்றிய ஆதிதிராவிடர் நல அணி அமைப்பாளர் கணேசப்பாண்டியன், ஊராட்சி செயலாளர் காமராஜ்,  விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் உட்பட கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.