தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் காய்கனி மார்க்கெட் அருகில், கல்வித்தந்தை காமராஜர் அவர்களின்,121வது பிறந்தநாள் விழா, மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழாவில் TDTA நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் திரு சொர்ணராஜ் அவர்கள், தலைமை தாங்கினார். திரு தாளமாணிக்கம் அவர்கள் வரவேற்புரை நடத்தினார், திரு செந்தில் பிள்ளை அவர்கள், காமராஜருக்கு சிறப்பு வழிபாட்டு பூஜை  நடத்தினார். திரு முத்து காமாட்சி, திரு பன்னீர்செல்வம், திரு காசி, திரு அந்தோணி ராயப்பன், திரு வேல் ராஜா, ஆகியோர் கலந்து கொண்டு  சிறப்பித்தனர். நடைபெற்ற நிகழ்ச்சியில் காமராஜர் உடை அணிந்து  பொதுமக்களுக்கு காட்சி அளித்த, SNTபள்ளி மாணவன், நவின் மேனன் செயல், அனைவர் கவனத்தையும் ஈர்த்து. வானவேடிக்கை மற்றும் மின் அலங்காரத்துடன், சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழாவில் கலந்து கொண்ட, அனைத்து மாணவ மாணவிகளுக்கும், காமராஜர் நற்பணி மன்ற தலைவர் திரு எம் ஏ மேடை சேர்மன் மற்றும் காமராஜர் இளைஞர் மன்றம் சார்பாக,பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது. இறுதியில் இனிப்பு வழங்கி, கல்வித்தந்தை காமராஜர் அவர்களின்,121வது பிறந்தநாள் விழா, சிறப்பாக கொண்டாடப்பட்டது.இதில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்,விழா இந்நிகழ்ச்சி ஏற்பாடுகள் அனைத்தும்,திரு பொன் பாண்டி,திரு செல்வம், திரு பாலகணேஷ், மற்றும் காமராஜர் இளைஞர் மன்ற நிர்வாகிகள், செய்தனர்.