தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல் பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில் கோவில்பட்டியைடுத்த கயத்தாறு சுங்கச்சாவடி அருகே தனிப்படையினர் உதவி ஆய்வாளர்கள் ரவிக்குமார், ராஜ பிரபு,, பிரைடரிக் ராஜன் ஆகியோர் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு வந்த கண்டெய்னர் லாரியை திறந்து சோதனையிட்டபோது அதில் மேற்பகுதியில் ஒரு ரகசிய அறை இருப்பது தெரிய வந்தது.பின்னர் போலீசார் அந்த அறையை திறந்து சோதனையிட்ட போது சுமார் இரண்டு கிலோ எடை கொண்ட 300 பேக்குகளில் கஞ்சா இருப்பது தெரியவந்தது.
அதையடுத்து 600 கிலோ கஞ்சாவுடன் கண்டெய்னர் லாரியை பறிமுதல் செய்த போலீசார் அதை கோவில்பட்டி மதுவிலக்கு அமல் பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.தொடர்ந்து கண்டெய்னர் லாரி ஓட்டுநர் பாண்டிச்சேரி ஏனம் பகுதியைச் சேர்ந்த சத்தி பாபு(39) மற்றும் கண்டெய்னர் லாரியில் இருந்த தூத்துக்குடி ஸ்டேட் பேங்க் காலனி சேர்ந்த சேகர் மகன் விஜயகுமார்(36), தூத்துக்குடி ஆரோக்கிய புரத்தைச் சேர்ந்த கோயில் பிள்ளை விளையைச் சேர்ந்த பாலச்சந்தர் மகன் மத போதகரான ஜான் அற்புத பாரத்(33) ஆகிய 3பேரையும் போலீஸார் கைது செய்தனர். மத போதகரே கஞ்சா கடத்தல் ஈடுபட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி
1 கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சா கடத்தல் - மத போதகர் உட்பட 3 பேரை அதிரடியாக கைது செய்த போலீசார்!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் பங்கேற்ற தியாகிகளுக்கு பாஜக சார்பில் வீரவணக்கம் : நினைவுச் சின்னத்திற்கு மாலையணிவித்து மரியாதை!
அடுத்த
உசிலங்குளம் மாட்டு வண்டி பந்தயம்!
இதையும் படிக்கலாம்
பொது மக்களை மரியாதை இன்றி நடத்தும் எட்டையபுரம் சார்பதிவாளரை கண்டித்து சிபிஎம் கண்டண ஆர்ப்பாட்டம்!
09 Jul 2026
விளாத்திகுளம் அருகே கோவில் கொடை விழாவை முன்னிட்டு நடைபெற்ற மாபெரும் எருது கட்டு விடும் விழா!
09 Jul 2026
விளாத்திகுளம் அருகே வீட்டில் படுத்திருந்த பெண் கழுத்தில் வெட்டு காயங்களுடன் கொலை : 15 பவுன் தங்க நகை மாயம்!
07 Jul 2026
பெண்களை கேலி கிண்டல் செய்து அவமானப்படுத்தி வரும் சிஎஸ்ஐ தூய ஆலய குருவானவர்!
28 Jun 2026