தூத்துக்குடியில் உள்ள உலகப் புகழ்பெற்ற பனிமயமாதா பேராலயத்தின் திருவிழாவை முன்னிட்டு இன்று கொடி பவனி:  ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பு! தூத்துக்குடியில் உள்ள உலகப் புகழ்பெற்ற பனிமயமாதா பேராலயத்தில்  ஆண்டுதோறும் திருவிழா வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு திருவிழா நாளை 26 ஆம் தேதி  கொடியேற்றத்துடன் துவங்கி வரும் ஆகஸ்ட் 5ஆம் தேதி தங்கதேர் பவணி நடைபெறும்.திருவிழாவில் தொடக்க நிகழ்ச்சியான,இன்று பேராலயத்தில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதைத் தொடர்ந்து பேராலய அதிபர் குமாரராஜா தலைமையில் கொடி பவனி நடைபெற்றது.   பேராலய வளாகத்தில் துவங்கிய கொடி பவனி நகரின் முக்கிய வீதியில் வழியாக மீண்டும்  பேராலயம் வந்தடைந்தது.  இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு மாதாவின் பாடல் பாடி மகிழ்ந்தனர் இதைத்தொடர்ந்து நாளை காலை பணிமயமாதா பேராலயத்தில் காலை 7 மணி அளவில் கொடியேற்ற சிறப்பு திருப்பலி நடைபெற்று அதை தொடர்ந்து கொடியேற்றம் நடைபெறும்.