தூத்துக்குடி மாவட்டத்தில் கைலாசபுரம் மற்றும் சாயர்புரம் பகுதியில் தமிழக அரசின் உத்தரவை மீறி 50க்கும் மேற்பட்ட பனை மரங்கள் வெட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ்நாடு பனை மரங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு வலியுறுத்தல்.  தூத்துக்குடியில் மாவட்ட ஆட்சியரிடம் தமிழ்நாடு பனை மரங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு மாநில தலைவர் தாமோதரன் தலைமையில் புகார் மனு அளிக்கப்பட்டது ,இந்த புகார் மனுவில் தமிழக அரசின் பனைமரங்களை வெட்டக்கூடாது என்ற உத்தரவை மீறி தூத்துக்குடி மாவட்டத்தில் கைலாசபுரம் மற்றும் சாயர்புரம் பகுதியில் பனை மரங்களை தீவைத்து கருகி விட்டது என்று முறைகேடாக 50-க்கும் மேற்பட்ட பனை மரங்களை வெட்டி செங்கல் சூளை மற்றும் தொழிற்சாலைகளுக்கு எடுத்துச் சென்றுள்ளனர், இது தொடர்பாக பனை மரங்களை வெட்டிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனவே பனை மரங்களை பாதுகாக்கும் வகையில் மாவட்ட ஆட்சித் தலைவர் உடனடியாக பனை மரங்களை வெட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் பனை மரங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.