தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள இ.வேலாயுதபுரம் கிராமத்தில் ஸ்ரீ செல்வ விநாயகர், ஸ்ரீ முனியசாமி, ஸ்ரீ காளியம்மன் திருக்கோவில் ஆனி பொங்கல் விழாவை முன்னிட்டு மாபெரும் மாட்டுவண்டி அருகே பந்தயம் நடைபெற்றது.இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 45 ஜோடி மாடுகள் போட்டியில் பங்கேற்றன.இந்த மாபெரும் மாட்டு வண்டிகள் பந்தயத்தை விளாத்திகுளம் ஒன்றிய குழு பெருந்தலைவர்  முனியசக்தி ராமச்சந்திரன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.போட்டியில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர் மற்றும் போட்டி வந்த சாரதிகளுக்கு விழா கமிட்டி சார்பாக பரிசுத்தொகை வழங்கி கவுரவிக்கப்பட்டது.